தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபரிடமிருந்து அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி, வைஷாலி

1 mins read
3b162531-b1e8-499b-b095-a7dfab7b5e88
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அதிபர் திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதைப் பெற்றார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இந்திய அதிபர் திரவுபதி முர்மு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அதிபர் திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர்.

அர்ஜூனா விருதை 26 பேர் பெறுகின்றனர். விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கிண்ணம் பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்