பீகாரில் குழந்தை உள்ளிட்ட மூவர் கொடூரக் கொலை; தந்தை, சகோதரர் தப்பி ஓட்டம்

பாட்னா: பீகாரில் காதல் திருமணம் செய்த மகளையும் அவரை மணந்த ஆடவரையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தையையும் கொலை செய்தவரை காவல்துறை தேடுகிறது.

பகல்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.

மகள் சாந்தினி குமாரி, 23, அவரது கணவர் சாந்தன் குமார், 40, அவர்களது இரண்டு வயது குழந்தை ரோஷினி குமாரி ஆகியோரை பெண்ணின் தந்தை பப்பு சிங் தமது மகன் தீரஜ் குமார் சிங்குடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பினார்.

நாவ்தோலியா என்னும் கிராமத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மூவரையும் வழிமறைத்து, இரும்புக் கம்பியால் அடித்து பின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் அருண் தெரிவித்துள்ளார்.

சாந்தினி குமாரியும் சாந்தன் குமாரும் 2021ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்ததாகவும் அதில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!