சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.

மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.

இந்தச் சட்னியில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, 11 வகையான அமினோ அமிலங்கள் உட்பட, உடல்நலத்திற்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!