காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா விலகல்

1 mins read
28a1bf98-bb62-4300-8a63-7e1307db3812
நிகழ்ச்சி ஒன்றில் மிலிந்த் தியோரா ராகுலுடன் கைகுலுக்கும் காட்சி. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா கட்சியிலிருந்து விலகி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசுக்கு இது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த மறைந்த முரளி தியோரா காங்கிரஸ் ஆட்சியில் 2006 முதல் 2011 வரை பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கு அடுத்து பல்வேறு பொறுப்புகளை அவரது மகன் மிலிந்த் தியோராவுக்கு கொடுத்து அழகு பார்த்தது காங்கிரஸ். 2011 முதல் 2014 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சமீப காலமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

55 ஆண்டு கால கட்சி உறவு முடிவுக்கு வருவதாக அவர் கூறியுள்ளளார். இவர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து அவரது கட்சியில் சேர்வார் என கூறப்படுகிறது. மிலிந்த் தியோரா ராகுலுடன் மிக நெருக்கமான நட்புறவை பேணி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்பதவி விலகல்