இடாநகர்: சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் பாஜக நாட்டை பிளவுபடுத்தப் பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மக்களை தங்களுக்குள் சண்டையிட பாஜக தூண்டுவதாக சாடினார்.
இளையர்கள், பெண்கள் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபடும் என்றார் ராகுல்.

