நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது

போபால்: இந்தியாவில் அழிந்துவிட்ட ‘சீட்டா’ எனப்படும் சிறுத்தைப் புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு சிறுத்தையும் இம்மாத தொடக்கத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த 2022ல் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள், 2023ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் என மொத்தம் 20 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.

இந்த சிறுத்தைகள் மத்தியப்பிரதேச மாநிலம் குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இதில், பல்வேறு காரணங்களால் ஏழு சிறுத்தைகள் உயிரிழந்தன. எஞ்சிய சிறுத்தைகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!