உயிர் பிரியும் தறுவாயிலும் 60க்கு மேற்பட்டோரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

பாலாசூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 60க்கு மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம், பாலாசூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) காலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தப் பேருந்து, மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த சுற்றுப்பயணிகளை ஏற்றிக்கொண்டு, பாலாசூர் மாவட்டத்திலுள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சென்றதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அப்போது, அதன் ஓட்டுநர் ஷேக் அக்தருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் உடனடியாகப் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியதாகப் பயணிகள் கூறினர். பின்னர் அவர்கள் உள்ளூர்வாசிகளை உதவிக்கு அழைத்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஓட்டுநர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தன் உயிர் பிரியும் தறுவாயிலும் சமயோசிதமாகச் செயல்பட்டு, பிறர் உயிரைக் காத்த ஓட்டுநரைப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!