மின்னிலக்க நாணய முதலீடு: ஆசைகாட்டி ரூ.60 லட்சம் மோசடி

மும்பை: அந்நியச் செலாவணியில் மின்னிலக்க நாணயம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஒருவர் தொலைபேசி வாயிலாக மும்பை தொழில் அதிபரிடம் கைப்பேசி மூலம் பேசியிருக்கிறார்.

அதை நம்பிய நவிமும்பை கலம்பொலி பகுதியைச் சேர்ந்த 59 வயது தொழில் அதிபர், அவ்வாறு முதலீடு செய்ய இணங்கி ரூ.65 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் அந்தத் தொழில் அதிபர், முதலீடு செய்து சில நாட்களுக்குப் பின் முதலீட்டின் வழி கிடைத்த லாபம் குறித்துக் கேட்ட போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியவர்கள் சரியாகப் பதில் அளிக்கவில்லை.

தொழில் அதிபர் மீண்டும், மீண்டும் கேட்டதை அடுத்து அவர்கள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 878-ஐ திருப்பி கொடுத்தனர். அதன்பிறகு தொலைபேசியில் பேசியவரை தொழில் அதிபரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும் அவர் மின்னிலக்கத்தில் முதலீடு செய்த பணத்தையும் திரும்பப் பெறமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர், அந்த மோசடி குறித்து நவிமும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர், ஐந்து பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!