திருப்பதி கோயிலில் கடந்த மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி கோயிலில் கடந்த மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம்

1 mins read
c415f3b7-8bf7-443d-8c68-c88adc4ff14b
திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனர்.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.

7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.