‘விபத்தில் என் மனைவி உயிரிழக்க நான்தான் காரணம்’: தன் மீதே புகார் கொடுத்த கணவன்

நாய் மீது மோதக்கூடாது என்பதற்காக காரை வேறு திசையில் திருப்பி, அதனால் தன் மனைவியை இழந்த ஆடவர், தன் மீதே புகார் அளித்த சம்பவம் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஆசிரியராகப் பணிபுரியும் 55 வயது பரேஷ் தோஷி, தன் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரெனச் சாலை குறுக்கே ஒரு நாய் வந்தது.

நாய் மீது மோதுவதைத் தவிர்க்க, காரை தோஷி திருப்ப முயன்றார். ஆனால், சாலையோரத்தில் இருந்த தற்காலிகத் தூண்கள் மீதும் சாலைத் தடுப்புகள் மீதும் கார் மோதியது.

தடுப்புகளில் ஒன்று கார் சன்னலை உடைத்துச் சென்று தோஷியின் மனைவி அமிதா அவரது இருக்கையிலிருந்து வெளியேற முடியாதபடி இறுக்கி வைத்ததுடன் அவருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டன.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமிதா இறந்துவிட்டார்.

இந்த வேதனைச் சம்பவத்திற்குப் பின், தனக்கு எதிராக தோஷி ‘எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து கொண்டார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக தன் மீதே அவர் புகார் அளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!