நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் அரசு வெற்றி

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிதீஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

5 எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களுடன் ஆதரவாக 129 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், கடந்த மாதம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார்.

பாஜகவைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சட்டமன்றத் தலைவர் அவாத் பிஹாரி செளத்ரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!