மணிப்பூரில் துப்பாக்கி சூடு: இருவர் உயிரிழப்பு; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இம்பால்: மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு காவலர்களுக்கும் குகி இனத்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த அந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாவல் படை தூப்பாக்கிச் சூடு நடத்தியது. அதையடுத்து நடந்த மோதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குகி இனத்தைச் சேர்ந்த காவலர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து 400க்கு மேற்பட்ட குகி இன மக்கள் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி அலுவலகத்தை இரவு 7.30 மணிவாக்கில் முற்றுகையிட்டு, குகி இன காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துச் செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

அத்துடன் அங்கிருந்த காவல்துறைக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடங்களைத் தாக்கினர். மேலும், அவர்கள் கட்டடத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

சூரச்சந்த்பூரில் பெரும்பான்மையினராக குகி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் குகி இனத்தவர்க்கும் மைத்தேயி இனத்தவர்க்கும் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக வன்முறை வெடித்தது.

பின்னர் அது இனக்கலவரமாக மாறியது. அதுதொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 32 பேரைக் காணவில்லை. மேலும், 4,786 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், 386 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மணிப்பூரில் கலவரங்களும் வன்முறையும் அவ்வப்போது தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குகி சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் எடுத்துக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சூரசந்த்பூர் பகுதியில் உள்ள தலைமை காவல் அதிகாரி அலுவலகத்தை 400க்கும் அதிகமான குகி இன மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களைக் காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காவலர்க்கும் குகி இனத்தவர்க்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குகி இனத்தவரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்களை எதிர்த்து அவர்கள் மீது கற்களை வீசி குகி இனத்தவர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் காவலர்களின் வாகனங்கள் தீக்கிரையாயின.

இந்த சம்பவத்தை அடுத்து, வன்முறை மேலும் பல இடங்களுக்குப் பரவாமல் இருக்கும் வகையில் சூரச்சந்த்பூர் பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!