புதுடெல்லி: காங்கிரசின் அதிகாரபூர்வ வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை முடக்கின.
வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய 201 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் கட்சி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக அஜய் மக்கான் குற்றம் சுமத்தினார்.மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சியின் வங்கி கணக்குகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று காங்கிரஸ் தரப்பில் வாதிட்டனர்.
இதையடுத்து, அக்கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.