மனைவியின் காதலரைக் கொன்று, கலவரத்தில் இறந்ததைப் போல் காட்டிய காவல்துறை அதிகாரி

டெராடூன்: தமது மனைவியின் காதலரைக் கொன்று, அந்த ஆடவர் கலவரத்தில் இறந்ததைப் போல் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி காட்டியதாகத் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி நிகழ்ந்த ஹல்ட்வானி கலவரத்தில் 25 வயது பிரகாஷ் குமார் மாண்டதாக முதலில் நம்பப்பட்டது.

ஆனால் அவரைக் காவல்துறை அதிகாரி பிரேந்திர சிங் கொன்று அவரது உடலை கலவரம் நிகழ்ந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேந்திர சிங்கின் மனைவியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பெண்ணுடன் இருந்தபோது காணொளி எடுத்து அதைப் பயன்படுத்தி அவரை மிரட்டி பிரகாஷ் குமார் பணம் பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலையில் பிரேந்திர சிங்கின் மனைவி பிரயங்கா, மைத்துனர் பெயின் ஆகியோருடன் பிரேம் சிங், நயிம் கான் ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரியங்கா தப்பி ஓடிவிட்டதாகவும் அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!