‘காலை ஒன்றுகூடலுக்கு வராத 100 மாணவர்கள் தற்காலிக நீக்கம்’

புதுடெல்லி: காலை ஒன்றுகூடலுக்கு வராத சுமார் 100 முதலாம் ஆண்டு மாணவர்களை இந்தியாவின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி தற்காலிகமாக நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரை அழைத்து வராவிட்டால் அவர்கள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்றும் அந்தக் கல்லூரி எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் நடைபெற்ற காலை ஒன்றுகூடல்களில் பங்கேற்காத 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு இம்மாதம் நான்காம் தேதியன்று செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியிடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டதற்கு ஏற்றவாறு அந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ளவில்லை என்றும் அதனால் அவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன் இரண்டாம் காலாண்டு தேர்வுகளை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ளுமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரி முதல்வர் ஜான் வர்கீசைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!