அணுசக்தியில் $35 பி. தனியார் முதலீடு

புதுடெல்லி: அணு எரிசக்தித் துறையில் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர் (S$35 பில்லியன்) முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுக்க உள்ளதாக அரசுத்தரப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறின.

கரிமத்தை வெளியிடாத மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு தற்போது மொத்த மின் உற்பத்தியில் 2 விழுக்காடாக உள்ளது.

அதனை அதிகரிக்க இந்தியா திட்டமிடுகிறது. அணு எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய தனியார் துறைக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல்முறை.

2030ஆம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் புதைபடிவமற்ற எரிபொருளை 50 விழுக்காடு அளவுக்குப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டு உள்ளது.

அந்த இலக்கை எட்ட தனியார் முதலீட்டை அரசாங்கம் நாடுகிறது.

தற்போது அந்த விகிதம் 42 விழுக்காடாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அதானி பவர், வேதாந்தா உள்ளிட்ட ஐந்து தனியார் நிறுவனங்களுடன் தலா 440 பில்லியன் ரூபாய் (S$7.13 பில்லியன்) முதலீட்டைப் பெற அரசாங்க அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக, இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புடைய வட்டாரங்கள் கடந்த வாரம் கூறின.

இருப்பினும், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை அந்த ஐந்து தனியார் நிறுவனங்களும் அவற்றுடன் பேச்சு நடத்திய அணு ஆற்றல் எரிசக்தித் துறை அதிகாரிகளும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!