புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘ஏர்டெல்’ நிறுவனம் விமானப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானத்தில் பறக்கும் போது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கும் வகையில் விமானத்தில் ரோமிங் திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் விலைகள் 195 ரூபாய் முதல் தொடங்குகின்றது. இதனைக் கொண்டு இணையத்தைப் பயன்படுத்துவதோடு நில்லாமல் அழைப்புகளையும் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.