ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஓட்டுநரின்றி 70 கி.மீ தூரம் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில், ஓட்டுநர் ரயிலை நிறுத்தும் கைக்கருவியைக் கொண்டு நிறுத்தாமல் இறங்கியதால் சரக்கு ரயில் ஒன்று 100 கி.மீ., வேகத்தில் 5 நிலையங்களைக் கடந்து 70 கி.மீ. தூரம் வரை சென்றது. இதையடுத்து பஞ்சாபின் கோஷியார்பூரில் சரக்கு ரயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!