பலத்த பாதுகாப்புடன் 1,608 பேர் காவலர் தேர்வு; கைக்குழந்தையுடன் தேர்வெழுதிய இளம்பெண்

பெங்களூர்: காவலர் துறையில் ஏட்டு, மகளிர் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தங்கவயலில் இரண்டு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் தேர்வு எழுத வந்த ஆண்கள் காலணி அணியவும் பெண்கள் தாலியைத் தவிர வேறு நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரி, உரிகம் முதல் நிலைக் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்த 3,000 பேரில் 1,608 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,392 பேர் தேர்வெழுத வரவில்லை. .

இவர்களில், பிஜாப்பூரில் இருந்து பாக்யலட்சுமி என்ற பெண் தனது நான்கு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார்.

அவர் குழந்தையைத் தனது தாயிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதி முடிக்கும்வரை அவரது தாய் அங்கிருந்த அறையில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!