58 வயதில் கர்ப்பமான பாடகரின் தாயார்

புதுடெல்லி: மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா 58 வயதில் கர்ப்பமாகியுள்ளார்.

ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவரது தாயார் 58 வயதான சரண் சிங்கை வெகுவாகப் பாதித்தது.

இதனால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தையைப் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இதையடுத்து செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

வரும் மார்ச் மாதம் அவருக்குக் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்தக் கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது 58 வயது தாயார் கர்ப்பமாகியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!