கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த தாதியர்க்கு தலா ரூ.51,000 வெகுமதி

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் ரோஷினி என்ற கர்ப்பிணிப் பெண் தனது கணவர் பிரசாந்த் சர்மாவுடன் சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்குப் பிரசவ வலி ஏற்பட, பதறிப்போன கணவர் பிரசாந்த், அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த தாதியர் ரேணுதேவி, ஜோதி ஆகிய இருவரும் ரோஷினிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

சாலையிலேயே கர்ப்பிணியைச் சுற்றிலும் துணிகளால் மறைவிடம் அமைத்து பிரசவம் பார்த்ததில், கடும் சிரமத்திற்குப் பின்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, தாங்கள் பணிபுரியும் சாரதா மருத்துவமனையிலேயே தாய், சேய் இருவரையும் சிகிச்சைக்காக தாதியர்கள் அனுமதித்தனர்.

இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பிணியின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியதற்காக ரேணுதேவி, ஜோதி ஆகிய இருவருக்கும் தலா ரூ.51,000 வெகுமதியாக அளித்து, பாராட்டி உள்ளது. தாதியர்களுக்கு பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!