முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன்: மகன் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி

அகமதாபாத்: தொழிலதிபரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் ஜோடிகளின் திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

ஜாம் நகரில் நடந்து வரும் இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது, “எனக்காக என் குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளனர். எனது வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன்.

“சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள்,” என உருக்கமாகப் பேசினார்.

இதைக்கேட்டு தந்தை முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அவர் தேம்பி அழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!