புதுடெல்லி: நாடு முழுவதும் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தில் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2011-12ஆம் ஆண்டில் இந்திய கிராமங்களில் புகையிலை, போதைப் பொருள்களின் பயன்பாடு 3.21 விழுக்காடாக இருந்தது என்றும் கடந்த 2022-23ஆம் ஆண்டில் இது 3.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2011-12இல் இந்திய நகரங்களில் புகையிலை, போதைப் பொருள்களின் பயன்பாடு 1.61 விழுக்காடாக இருந்தது என்றும் கடந்த 2022-23இல் இது 2.43 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இந்திய கிராமங்களில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த தொகை குறைந்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிராமங்களில் கல்விக்கான செலவு 3.49% ஆக இருந்தது என்றும் கடந்த நிதியாண்டில் இச்செலவு விகிதம் 3.30% ஆக குறைந்துவிட்டது என்றும் மத்திய அரசின் ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.