வயல்வெளியில் தரையிறங்கிய ராணுவப் பயிற்சி விமானம்

கயா: இந்திய ராணுவத்தின் சிறிய வகை விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் தரையிறங்கியது.

இந்திய ராணுவ பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான அந்த விமானத்தில் பயிற்சி விமானிகள் இரண்டு பேர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென வயலுக்குள் இறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயிற்சி விமானிகள் இருவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பார்பர் என்ற பகுதியில் நிகழ்ந்தது.

நல்லவேளையாக விமானம் தாறுமாறாகத் தரையிறங்கிய அந்த வயலில் விவசாயிகள் யாரும் பணியில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!