மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார் ராகுல்:பிரதாப் சிங்கல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரதாப் சிங்கல் தெரிவித்தார்.

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது சந்திப்பை முடித்துகொண்டு உத்தரப் பிரதேசம் திரும்பியுள்ள அவர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

மேலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பைக் காங்கிரஸ் தலைமை விரைவில் வெளியிடும் என்றார் சிங்கல்.

சென்ற 2002ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகத் கூறப்பட்டுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தின் முக்கிய சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!