சிறுத்தையை அறையில் அடைத்த சிறுவன்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 12 வயதுச் சிறுவன் ஒருவன், அலுவலக அறைக்குள் புகுந்த சிறுத்தையை அறைக்குள் பூட்டிய செயல் இணையத்தில் பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) காலை, மலிகான்-நம்பூர் சாலையிலுள்ள ‘சாய் செலிப்ரேஷன்’ திருமண மண்டபத்தில் நடந்தது.

சிறுவனின் தந்தை, அந்த மண்டபத்தில் பாதுகாவல் பணியாளராக வேலை செய்கிறார்.

அலுவலக அறையில் கைத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சிறுத்தை நுழைந்ததும் சத்தமின்றி நழுவி, உடனடியாக அறையைப் பூட்டினான்.

பின்னர், அந்த அழையா விருந்தாளி பற்றித் தன் தந்தையிடம் தெரிவித்தான்.

ஏற்கெனவே அந்த வட்டாரக் குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம் குறித்துத் தரப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அதைத் தேடிவந்தனர்.

சிறுவன் பூட்டியதைத் தொடர்ந்து அதிகாரிகள் மயக்க மருந்தின் உதவியுடன் அந்த ஐந்து வயதுச் சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்டனர்.

மோகித் அஹிரே எனும் அச்சிறுவன் சிந்தித்து, விரைந்து செயலாற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!