பெங்களூரு உணவக வெடிகுண்டுச் சம்பவம்

சந்தேக ஆடவரின் படத்தை வெளியிட்டது தேசிய புலனாய்வு அமைப்பு

புதுடெல்லி: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆடவரின் புகைப்படத்தை அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.

அவர் கைது செய்யப்படுவதற்கு வித்திடும் தகவலைப் பகிர்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அது கூறியது.

அந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமுற்றனர். சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பு விசாரணையை ஏற்று நடத்தத் தொடங்கியது.

தனது எக்ஸ் தளத்தில் அந்தச் சந்தேக ஆடவரின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் கோரும் அமைப்பு, அதுகுறித்து விவரம் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றது.

அந்தப் படத்தில், அந்தச் சந்தேக ஆடவர் சாம்பல் நிற சட்டையும் ஜீன்ஸ் காற்சட்டையும் அணிந்திருப்பது தெரிந்தது. அவர் முதுகில் பை ஒன்றை ஏந்தியிருந்தார். தமது அடையாளத்தைப் பாதுகாக்க, அவர் தலையில் தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!