புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் குழு சனிக்கிழமை அறிவித்தது.
அதில், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் கேரளாவிலிருந்து 16, கர்நாடகாவிலிருந்து 7, சத்தீஸ்கரில் 6, தெலுங்கானா 4, மேகாலயா 2, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, லட்சத் தீவு தலா 1 தொகுதிகள் என மொத்தம் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் திரு சசி தரூர் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.