அமலாக்கத்துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: அமலாக்கத் துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதாவை அமலாக்கத் துறையினர் கடந்த 15ஆம் தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம் அவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கவிதாவை கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில், அவர் திடீரென கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி என்.கே.நாக்பால் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், தன்னைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் கைதை ரத்து செய்து தன்னை விடுவிக்கக் கோரியும் கவிதா சார்பில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேலவை உறுப்பினரான கவிதாவின் கைதுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவை நன்கு விசாரித்த பின்னரே அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!