பீகாரில் லாலுவின் 4வது வாரிசை தேர்தலில் களமிறக்கத் திட்டம்

பாட்னா: பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனருமான (ஆர்ஜேடி) லாலு பிரசாத் யாதவின் வாரிசுகளான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், டாக்டர் மிசா பாரதி ஆகிய மூவரும் ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், அவரது மகள் ரோகிணி ஆச்சார்யாவை இந்தத் தேர்தலில் களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது.

லாலு பிரசாத் மருத்துவமனையில் இருந்தபோது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டதோடு தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானமாக அளித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் ரோகிணி.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள மேலவை உறுப்பினரான (எம்எல்சி) சுனில் குமார் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியல் அரங்கில் நுழையத் தயாராக உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் ரோஹிணி ஆச்சார்யா, இதுதொடர்பான செய்திகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் ரோகினி செவ்வாய்க்கிழமை காலை தனது அண்ணனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை புகழ்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!