தெலுங்கானா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

தெலுங்கானா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

1 mins read
c42e1602-bd14-4fd5-8917-f9635488aed1
படம்: - இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தமது பதவிகளிலிருந்து விலகினார். இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, புதன்கிழமை (மார்ச் 20) ஆளுநர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குறிப்புச் சொற்கள்