ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரனின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை மார்ச் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அந்த நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5வது முதலமைச்சராக இருந்தவர் ஹேமந்த் சோரன். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும், மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிபு சோரன் மகனும் ஆவார்.

ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!