கோல்கத்தா: பண மோசடி வழக்கு தொடர்பாகக் கோல்கத்தாவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் பிற இடங்களில் சனிக்கிழமை (மார்ச் 23) மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.
நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டி இருந்தார். அதானி குழுமத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக மஹுவா மொய்த்ரா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சனிக்கிழமை முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ நடத்தப்பட்ட சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.