ஸ்கூட்டரில் கம்பிவடம் சிக்கி படுகாயம் அடைந்த மாது

கொல்லம்: மாது ஒருவரின் ஸ்கூட்டரில் கம்பிவடம் சிக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் சந்தியா.

மார்ச் 23ஆம் தேதியன்று கணவரின் பட்டறையில் உதவி செய்துவிட்டு தனது ஸ்கூட்டரில் அவர் கிளம்பவிருந்த நேரத்தில் அதிக சரக்குகளைக் கொண்ட பெரிய லாரி ஒன்று அவரைத் தாண்டிச் சென்றது.

லாரியில் இருந்த பொருள்கள் மேலே இருந்த கம்பிவடத்தைப் பெயர்த்ததை அடுத்து, பின்னால் சந்தியாவின் ஸ்கூட்டரில் அந்தக் கம்பிவடம் சிக்கிக்கொண்டது.

லாரி முன்னோக்கிச் செல்ல, ஸ்கூட்டரையும் அதன் மேல் இருந்த சந்தியாவையும் இழுத்துச் சென்றது.

கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, சந்தியா தரையில் விழுந்தார்.

அவரின் ஸ்கூட்டர் உயரப் பறந்த பிறகு அவர் மீது விழுந்தது.

அக்கம்பக்கத்தார் உடனே லாரியை நிறுத்தினர்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு சந்தியா கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், காயங்களின் கடுமை கருதி கூடுதல் சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!