மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் போட்டியிடவில்லை

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவைத் தேர்தலில் அவரது சொந்தத் தொகுதியில் தன் மருமகனைக் களமிறக்கியுள்ளார்.

இதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்த்தரப்பு ‘இண்டியா’ கூட்டணியின் தலைவருமான திரு கார்கே (81), கடந்த 1972ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

பின்னர், 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் குல்பர்கா தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் கார்கே தோல்வி அடைந்தாலும், இம்முறை போட்டியிடுவார் என குல்பர்கா தொகுதிவாசிகள் எதிர்பார்த்தனர். அவரது ஆதரவாளர்களும் ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அந்தத் தொகுதியில் கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணி போட்டியிடவிருக்கிறார்.

இதுகுறித்துக் கருத்துரைத்த கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே,‘‘இது கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் அவர் எடுத்த முடிவு. கூட்டணியின் தலைவராகவும் இருப்பதால் நாடு முழுவதும் பயணம் செய்து, தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் நாடாளுமன்றத்தில் அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கும்,’‘என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!