கோல்கத்தா: ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மார்ச் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 94 வயதான ஸ்மரணானந்தா ஆன்மீகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராக அறியப்படுகிறார். கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.