புதுடெல்லி: லாவோசில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்களை இந்திய அரசாங்கம் மீட்டுள்ளது.
கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய இளைஞர்களை இணைய மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் லாவோசில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
“லாவோஸ் நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு தற்போது பத்திரமாக இந்தியா திரும்புகின்றனர். உள்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு,” என்று தனது எக்ஸ் பதிவில் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கம்போடியாவில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி நிதி மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பலர் மீட்கப்பட்டு உள்ளனர்.