புற்றுநோய் மருந்து மோசடி; போலி மருந்துகள் பறிமுதல்

புதுடெல்லி: ஏற்கெனவே, டெல்லியில் போலியாக புற்றுநோய் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த கும்பல் கைதான நிலையில், மற்றுமொரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

பழைய டெல்லியில் காவல்துறையினர் மூன்று மருந்துக் கடைகளில் நடத்திய சோதனையில், ஏராளமான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் ரூ.8 கோடி மதிப்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பொறியியளார்கள், ஒரு மருத்துவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

முன்னதாக, காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் குறித்து டெல்லி அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டது போன்ற வில்லைகளை மட்டும் அந்த மருந்துகளில் இணைத்து, அவை மிக அதிக விலைக்கு இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடப்பதாகவும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!