புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரசார நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திற்கு 73,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், தற்காலிகக் கட்சி அலுவலகங்கள், வாகன அனுமதி, வீடு, வீடாக பிரசாரம் உள்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
அவற்றில் 44,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 11,200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 10, 819 விண்ணப்பங்கள் போலியானவை என்பதால் ரத்து செய்யப்பட்டன என ஆணையம் குறிப்பிட்டது.
தமிழ்நாடு 23,239, மேற்கு வங்காளம் 11,976, மத்தியப் பிரதேசம் 10,636 ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன. 17 விண்ணப்பங்களுடன் சண்டிகார் கடைசி இடத்தில் இருக்கிறது.