கனடா தேர்தலில் இந்தியத் தலையீடு இல்லை

புதுடில்லி: கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து விசாரித்த குழு, தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் விசாரணை மேற்கொண்டது.

எனினும், கனடாவின் கடந்த இரண்டு தேர்தல்களில் சீனா தலையிட்டதாக கனேடிய புலனாய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

விசாரணைக் குழுவின் முன் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை சாட்சியமளிப்பார் எனக் கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு தேர்தலில் காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம்கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்களை அதிகம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்ததாகவும், தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இருநாட்டு உறவு மோசமடைந்தது. கடந்த பிப்ரவரியில் ‘சீனா, ரஷ்யா உடன் இந்தியாவையும் வெளிநாட்டு அச்சுறுத்தல்’ என கனடா உளவுத்துறை குற்றம் சாட்டியதில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!