காசி விஸ்வநாதர் கோயில்: காவலர்களுக்கு காக்கிக்கு பதில் காவி உடை

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் வழக்கமான காவலர் சீருடைக்கு பதிலாக காவி உடை அணிந்துள்ளனர். அவர்கள் அர்ச்சகர்கள் அணியும் வகையிலான காவி ஆடைகளும் ருத்ராட்ச மாலையும் அணிந்து பணியில் நியமிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “காவலர்கள் அர்ச்சகர் போல் உடை அணிந்துள்ளனர். இதுபோன்ற உத்தரவு பிறப்பித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். சீருடை அணியாமல் காவலர்களை நியமித்து இருப்பது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். காவலர்கள் என்ற போர்வையில் யார் வேண்டுமானாலும், கோயிலுக்குள் செல்ல வாய்ப்பு ஏற்படும்,” என்றார்.

பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாரணாசி காவல்துறை ஆய்வாளர் மோஹித் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!