பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பஸ்தாரில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, அதிபர் திரெளபதிமுர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி பால ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், இது பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.