சுமோகெடிமா (நாகாலாந்து): நாகாலாந்தின் சுமோகெடிமாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜேபி நட்டா உரையாற்றினார்.
அப்போது அவர், “நாகாலாந்து மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அக்கட்சி தவறாகப் பயன்படுத்தியது. மக்களையும் அவர்களின் விருப்பங்களையும் அக்கட்சி மதிக்கவில்லை. காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட கொள்கை என்னவென்றால், ‘வாக்குகளைப் பெறு; வாக்களித்தவர்களை மற’ என்பதுதான்,” என்றார் நட்டா.
மேலும், “இண்டியா கூட்டணி என்பது ஊழல்வாதிகளின் கூட்டமே தவிர வேறில்லை. குடும்ப கட்சிகளால் உருவானது அந்தக் கூட்டணி. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சிறையில் இருக்கிறார்கள் அல்லது பிணையில் இருக்கிறார்கள்,” என்று நட்டா பேசினார்.