கேரளாவில் டெங்கிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1,373 பேர் டெங்கி காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களில் 294 பேருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் டெங்கி பாதிப்பு காரணமாக 6 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

கேரளாவில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் கொசுக்களால் பரவும் டெங்கி, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 விழுக்காடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!