புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஒவ்வொரு வாக்கும் பாதுகாப்பாக இருக்கும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்துள்ளார்.
மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்றும் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில்நுட்பம், நிர்வாகம், செயல்முறைகள் தொடர்பில் பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு விழுக்காடு பாதுகாப்பானவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றமும் சந்தேகம் எழுப்பி உள்ளது. நாங்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்.
“வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாது,” என்று ராஜீவ் குமார் மேலும் கூறியுள்ளார்.