ஹைதராபாத்: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நான்காம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
நான்காம் கட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என இரு மாநிலங்களிலும் உள்ள தலைவர்கள் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.