இஸ்ரேல், துபாய்க்கு விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தம்: ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவுவதால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்தது.

இதேபோல், துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த நகரத்துக்கான விமானச் சேவையையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாக கூறியது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புதுடெல்லிக்கும் டெல் அவிவ்வுக்கும் இடையேயான விமானச் சேவைகள் ஏப்ரல் 30ஆம் தேதி வரையும் துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் ஏப்ரல் 21ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

மேலும், விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பயணத்தை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக்கட்டணம் ரத்து மற்றும் மறுஅட்டவணையின்போது ஒருமுறை மட்டும் சலுகை அளிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!