மதுபோதையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 74 பேர் பணியிடை நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 74 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) மதுபோதையுடன் பணிபுரியும் ஊழியர்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக 74 நிரந்தர ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் கூறியுள்ளார்.

கேரள அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணி புரிவதாக புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமாரின் உத்தரவுப்படி அரசுப் பேருந்துகளில் காவலர்கள் அதிரடி சோதனையைத் தொடர்ந்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 100 பேர் சிக்கினர். இவர்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 74 நிரந்தரப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்காலிகப் பணியாளர்கள் 26 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மதுபோதையுடன் 49 ஓட்டுநர்களும் 31 நடத்துநர்களும் பணிக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!