புதுடெல்லி: மத்திய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால வரவு செலவு கணக்கில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூடுதலாக ரூ.19.58 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெருநிறுவனங்களில் வரி வசூல் அதிகரித்ததே ஒட்டுமொத்த வருவாய் அதிகரிக்க காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி வசூலும் எதிர்பார்ப்புகளை தாண்டி ரூ.14.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், பொருள் சேவை வரி வருவாய் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.