கேக் சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி: செயற்கை இனிப்பூட்டி காரணம்

பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மார்ச் 24ஆம் தேதி தனது பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் மான்வி.

மான்வியின் பிறந்தநாளுக்காகக் குடும்பத்தினர் பாட்டியாலாவில் உள்ள பேக்கரியிலிருந்து இணையத்தின் மூலம் சாக்லெட் கேக் வாங்கினர்.

அதைச் சாப்பிட்ட பிறகு அவர்கள் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

சிறுமி மான்வி உயிரிழந்ததால், அதிகாரிகள் அந்த பேக்கரியிலிருந்து கேக்கின் மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

கேக்கில் அதிக அளவிலான ‘சாக்கரின்’ எனப்படும் செயற்கை இனிப்பூட்டி கலந்திருந்தது அதில் தெரியவந்ததாக மாவட்டச் சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஜிந்தால் கூறினார்.

இந்த இனிப்பூட்டியை அதிக அளவில் உட்கொண்டால் உடலில் சர்க்கரை அளவு அதிவேகமாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது.

பேக்கரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!